களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள்

-முனைவர் பா.ஜம்புலிங்கம்
1993 முதல் பௌத்த ஆய்வு தொடர்பாக புத்தர் சிற்பங்களைத்தேடி களப்பணி சென்றபோது கண்டுபிடிக்கப்பட்ட சமணர் சிற்பங்கள் 
1.கங்கைகொண்டசோழபுரம்
2.காரியாங்குடி
3.கோட்டைமேடு
4.பெருமாத்தூர்
5.செங்கங்காடு
6.தஞ்சாவூர்
7.அடஞ்சூர்
8.செருமாக்கநல்லூர்
9.சுரைக்குடிப்பட்டி
10.பஞ்சநதிக்குளம்
11.தோலி (நவம்பர் 2011)


1 முதல் 6 வரை    (மேற்கோள்)
புத்தரது சிற்பங்களைத் தேடிக் களப்பணிக்குச் சென்றபோது கங்கைகொண்டசோழபுரம் (உயரம் 20"), திருவாரூர் வட்டம் தப்ளாம்புளியூர் அருகே காரியாங்குடி (16"), புதுக்கோட்டை ஆலங்குடிப்பட்டி அருகேயுள்ள கோட்டைமேடு (40"), திருத்துறைப்பூண்டி வட்டம் செங்கங்காடு (16"), குன்னம் வட்டம் பெருமத்தூர் (24"), தஞ்சாவூர் மேலவீதி வடக்குவீதி சந்திப்பில் மூல அனுமார் கோயில் பின்புறம் (34") போன்ற இடங்களில் பல அளவிலா சமணர் சிற்பங்களைக் காணமுடிந்தது. கோட்டை மேட்டில் இச்சமணரை சிவநாதர் என்று கூறுகின்றனர். செங்கங்காட்டில் புத்தர் என்று கூறி வழிபாடும் செய்து வருகின்றனர். (பா.ஜம்புலிங்கம், சோழ நாட்டில் பௌத்தம், முனைவர் பட்ட ஆய்வேடு,தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1999, ப.160).
During field work so many Jain statues are found in the Cola country. While searching for Buddha statues, these statues are found by this scholar. Such kind of Jain statues are found in the following places:   
Gangaikondacolapuram town - 20"
Kariyankudi (Near Taplampuliyur at Tiruvarur taluk) - 10"
Kottaimedu (In Alangudipatti near Pudukottai) - 40"
Peramatthur (Kunnam taluk) - 16"
Sengangadu (Tirutthiruppondi taluk) - 16"
Thanjavur (At the backside of the Moola Anjaneyar temple) - 34"
While in Kottaimedu the statue is referred as 'Sivanathar', in Sengangadu it is referred as 'Buddha'. During field work it is also understood that the local people are unaware of the differences between Buddha and Jain statues. (B.Jambulingam, Buddhism in the Cola  country, Project Report, Nehru Trust for the Indian Collections at the Victoria & Albert Museum, New Delhi, 2002).
Dr.B.Jambulingam, a research scholar of Thanjavur Tamil, University in his survey for Buddhist antiquities in Thanjavur region came across a few Jain sculptures scattered in different desolate spots,. He has identified four seated Tirthankara stone sculputres at places like Kariyankudi near Taplampuliyur in Tiruvarur Taluk, Tiruvarur District (Sl.No.30), Kottaimedu near Alangudipatti of Pudukottai District (Sl.No.31), on the back side of the Moola Anumar temple in Thanjavur (Sl.No.32) and Senkadu of Tiruthuraipoondi taluk, erstwhile Tanjore District. Of them the one at Kottaimedu in Pudukottai Ditrict is damaged on the head portion. The Kariyankudi Tirthankara is very majestic with Bha Mandala and Chamara bearers. He is in seated ardhaparyankasana posture on a lotus pedestal carved over a rectangle base. (R.Kannan & K.Lakshminarayanan, Bulletin of the Chennai (Madras) Government Museum, Iconography of the Jain Images in the Districts of Tamil Nadu, New Series-General Sectin, Vol XVII, No.1, 2002, The Commissioner of Archaeology and Museums, Government Museum, Chennai, 600 008, p.27).
7.அடஞ்சூர்
 தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூதலூர் அருகே உள்ள அடஞ்சூர் என்னும் கிராமத்தில் இரண்டு அடி உயரமுள்ள சமணர் சிற்பம் ஒன்று இக்கட்டுரையாளரால் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. சிவந்திதிடல் அருகே உள்ள நல்லகூத்த அய்யனார் கோயிலில் இந்த சமண தீர்த்தங்கரர் சிற்பம் உள்ளது. இந்த சமண சிற்பத்தை அனைவரும் புத்தர் என்றே கூறி வருகின்றனர்.(பா.ஜம்புலிங்கம், தமிழ்ப்பல்கலைக்கழகச் செய்தி மலர், சூன் 2003, ப.2)
 8.செருமாக்கநல்லூர் (திரு தில்லை கோவிந்தராஜனுடன் இணைந்து)
A sculpture of Mahavir, the 24th Thirthankara, was found at Sabarimukkayi Amman Thidal in Serumakkanallur village of Papanasam taluk in Thanjavur district recently. G.Thillai Govindarajan who is undertaking a project on 'Jainism in Thanjavur District', with aid from the Nehru Trust for Indian Collections, New Delhi and the Victoria and Albert Museum in London and B.Jambulingam, Researcher, Tamil University, found it during their field study. The three-foot high, 2.25 foot wide sculpture was on a pedestal with Mahavir in the Padmasana posture. It has lion throne, chamara bearers, triple umbrella and a tree. The face and the top portion of the umbrella are broken. The sculpture belongs to the later Chola period. The locals worship this sculpture as Karuppasamy. Daily worship is done and special pujas are conducted on Fridays in the month of Aadi, Mr Govindarajan said. (Mahavir sculpture found, The Hindu, 13th June 2009, p.5)  
9.சுரைக்குடிப்பட்டி  (திரு தில்லை கோவிந்தராஜனுடன் இணைந்து)
தஞ்சை மாவட்டம்  பூதலூர் அருகே சுரைக்குடிபட்டி கிராமத்தில் அய்யனார் கோயில் உள்ளது. அங்கு சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது டெல்லி நேரு டிரஸ்ட் அமைப்பின் உதவியுடன் பா.ஜம்புலிங்கம் வழிகாட்டுதலின்படி தஞ்சை மாவட்டத்தில் சமணம் என்ற தலைப்பில் கொத்தங்குடி உராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கோ.தில்லை கோவிந்தராஜன் அசிரியர்கள் எஸ்.பாஸ்கர், ரவிவர்மன், பழனிச்சாமி மற்றும் முருகேசன் ஆகியோர் அடங்கிய குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டது. 3 1/4 அடி உயரமும், 2 1/2 அடி அகலமும் கொண்ட இந்த சிற்பம் ஒரு பீடத்தின்மீது அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் சிம்மாசனத்தில் உள்ளது. சிற்பத்தின் இரண்டு பக்கங்களிலும் நின்ற நிலையில் யக்சர்கள் காணப்படுகின்றனர். தலைக்கு மேல் முக்குடை உள்ளது. நீண்ட காதுகளும், மூடிய நிலையில் கண்களும் கொண்ட இச்சிற்பம் திகம்பரமேனியாக உள்ளது. இச்சிற்பம் பிற்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. (பூதலூர் அருகே சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டுபிடிப்பு, தினத்தந்தி, 24.2.2010, ப.20).
10.பஞ்சநதிக்குளம் மேற்கு (திரு தில்லை கோவிந்தராஜனுடன் இணைந்து)
வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் முள்ளியாற்றுக்குள் மக்கள் துணி துவைக்க பயன்படுத்திவரும் 11ஆம் நூற்றாண்டு சமணர் சிற்பம் என்பது தெரிய வந்தது. இது குறித்து முனைவர் பா.ஜம்புலிங்கம், தில்லை கோவிந்தராசன் ஆகியோர் தெரிவித்தது : "தலை பகுதி காணப்படாத சமணர் கல்சிலைஅமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளது. இரு பக்கங்களிலும் யக்சிகள் காணப்படுகிறது. பீடத்தின் வலது பக்கத்தில் சிம்மம் காட்டப்பட்டுள்ளது. பீடத்துடன் 57செமீ உயரம், 45 செமீ அகலம் உள்ளது. நாகை மாவட்டத்தில் ஏற்கெனவே நாகை வெளிப்பாளையம், புளியகுடி ஆகிய இடங்களில் சமணர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த பகுதியில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்" என தெரிவித்தனர். (பழங்காலச்சிலை குறித்து ஆய்வு, தினமணி, 21 ஆகஸ்ட் 2010, ப.4)

11.தோலி (திரு தில்லை கோவிந்தராஜனுடன் இணைந்து)
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தோலி கிராமத்தில் 24ஆவது சமண தீர்த்தங்கரரான மகாவீரர் சிற்பம் அண்மையில் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து தில்லை கோவிந்தராசன், முனைவர் பா.ஜம்புலிங்கம்  ஆகியோர் தெரிவித்தது : "இந்த சிற்பம் 32 அங்குலம் உயரமும், 19 அங்குலம் அகலமும் கொண்டது. இந்தச்சிலை பத்மாசனத்தில் தியான கோலத்தில் உள்ளது. சிம்மாசனம், சாமரம் வீசும் யட்சர்கள், முக்குடை போன்ற அமைப்புகள் இந்தச் சிற்பத்தில் காணப்படுகின்றன. நீண்ட காதுகளும், மூடிய நிலையில் கண்களும் கொண்ட இந்தச் சிலை திகம்பர மேனியாக உள்ளது. தலையின் பின்புறம் பிரபை காணப்படுகிறது. இது பிற்காலச்சோழர் காலத்தைச் சேர்ந்ததாகும். காவிரி டெல்டா மாவட்டப் பகுதிகளான வேம்பழகன்காடு, முன்னியூர், செங்கங்காடு, தம்ளாம்புலியூர், பஞ்சநதிக்குளம், நாகப்பட்டினம், புலியூர் செராங்குடி ஆகிய ஏழு இடங்களில் சமண சிற்பங்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இதன்மூலம் இப்பகுதியில் சமணம் தழைத்திருந்ததை அறியமுடிகிறது.  (தோலி கிராமத்தில் மகாவீரர் சிலை கண்டெடுப்பு, தினமணி, 10 நவம்பர் 2011, ப.5).

(12.1.2012 வரை மேம்படுத்தப்பட்டது)

Comments