Posts

Showing posts from August, 2014

ஆபுத்திர காவியம் : மு.கு.ஜகந்நாதராஜா

Image
----------------------------------------------------------------------------------------------------------   தஞ்சாவூரில் நடைபெற்ற எட்டாம் உலகத்தமிழ்நாட்டிற்கு வந்தபோது (1-5.1.1995) முதன்முதலாக பன்மொழிப்புலவர் மு.கு.ஜகந்நாதராஜா அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனது பௌத்த ஆய்வைப் பற்றி தெரிவித்தபோது மிகவும் மகிழ்ச்சியடைந்து அம்மாநாட்டில் அவர் அளிக்கவிருந்த சமண, பௌத்த தத்துவ வேறுபாடுகள் என்ற தலைப்பிலான கட்டுரையின் படியை என்னிடம் தந்து  வாழ்த்து தெரிவித்தார். எனது ஆய்வினை பாராட்டிய பெரியோரில் இவரும் ஒருவர். இவருடைய காவியத்தைப் படித்து, பகிர்வதில் பெருமையடைகின்றேன். ----------------------------------------------------------------------------------------------------------  பன்மொழிப்புலவர் மு.கு.ஜகந்நாதராஜா (ஜூலை 26, 1933  - டிசம்பர் 2, 2008) அவர்கள் எழுதியுள்ள ஆபுத்திரன் வரலாறு கூறும் காவியமான ஆபுத்திர காவியம் படித்தேன். முழுக்க முழுக்க காவிய நடையில் அமைந்துள்ள இந்நூலில் ஆபுத்திரனின் வரலாற்றைத் தந்துள்ளார் ஆசிரியர். முன்னுரையில் அவர் மணிமேகலையின் காவியச் சிறப்பை எடுத்